
‘போப்பின் கழிவறை” (THE POPE’S TOILET) என்றத் திரைப்படத்தில் மெலா நகரத்துக்கு (கற்பனையான நகரம்) போப் வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், தாம் செல்வசெழிப்படையப் போகிறோம் என்ற எண்ணத்தில் போப் வரும் நாளன்று நகரத்தில் 387 கடைகள் திறந்திருந்தனர் அந்நகரத்து மக்கள். பஞ்சுமிட்டாயிலிருந்து பதக்கங்கள் முதலான பொருட்கள் அச்சந்தையில் விற்பனைக்கு தயார்செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊடங்கள் சொன்னது போல ஆயிரக்கணக்கானோர் வரவில்லை வெறும் 400 பிரேசிலியர்கள் மட்டுமே வந்திருந்தனர்.. அவர்களும் போப்பைப் பார்த்தோமா போனோமா என்ற சென்றுவிட, விற்பனைக்காக தயார் படுத்தியிருந்த பஞ்சுமிட்டாயிலிருந்து ஸாசேஜ், அதுயிது என எல்லாமும் விற்கப்படாமல் அந்நகரத்து மக்களின் பொருளாதாரம் சீரழிந்ததுதான் மிச்சம். சின்னச் சின்ன கடத்தல்களைச் செய்து தன் பிழைப்பை ஓட்டும் கதையின் நாயகன் பெட்டோ தன் மனைவி மற்றும் மகளோடு அன்பும் பரிவும் ததும்பிய வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகின்றன. போப் வரும் அன்று ஒரு கழிவறை கட்டி பக்தர்களின் சொளகரியத்திற்காக விட்டோமானால் ஊடகம் சொன்ன ஆயிரக்கணக்கானோர் கழிவறையைப் பயன்படுத்த வசூலிக்கும் கட்டணத்தால் தமது பொருளாதர நிலமை சற்றே உயரும் என்றக் கனவில் இருக்கிறார்கள். வருபவர்களுக்கு எப்படியெல்லாம் உபசரணையோடு வரவேற்பது வசூலிப்பது என ஒத்திகைகூட பார்க்கிறார்கள். இதற்கிடையில் அவன் கடத்தல் செய்துவந்தது மகளுக்குத் தெரியவர அதன் மூலம் அவனது மனைவிக்கும் தெரிந்துவிடுகிறது. அவர்கள் அவனோடு பேச மறுத்தது அவன் மனதை இம்சித்தது. கழிவறைக்குத் தேவையான பணம் வந்ததும் கடத்தலை விட்டுவிடுவதாகச் சொல்கிறான். மகளின் கல்லூரிக்கு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை மனைவி கொடுக்கிறாள். அதைக் கொண்டு தான் போப் வரும் அன்ற அவசரஅவசரமாக கழிவறைக்கான கோப்பையை வாங்கி வருகிறான். அது நேரலையாக ஒளிபரப்பட்ட தொலைக்காட்சில் அவன் தலையில் அந்தக் கோப்பையைத் தூக்கி வருவது காட்டப்படுகிறது. அதைப் பார்த்த அவனது மகள் கண்ணீர்விடும் அந்தக் காட்சியில் அவன் தன் மீதும் தன் தாயின் மீதும் கொண்டிருந்த அன்பை உணர்கிறதாக வெளிப்படுகிறது. போப் வந்து போய்விடுகிறார். வெறும் 400 பேர் வந்துபோக 387 கடைகளில் வியபாரமில்லாமல் பொருட்கள் வீணாகிட, ”போப் வந்து சென்றால் செல்வம் வரும்” என்ற எதிர்பார்ப்பானது பொய்துப் போகிறது.”நமக்கு ஒரு நல்ல கழிவறை கிடைத்ததே” என்ற சந்தோசம் அம் மூவருக்கும் இருப்பதைக் காணமுடிகிறது.
இந்தப் படம் 1988ல் உருகுவேக்கு போப் ஜான் பால் II வருகைதந்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டக் கதை.
யெலேனா ரூக்ஸ் தயாரிப்பில், யென்ரிக் ஃபெர்னான்டஸூம் சீசர் கர்லோனும் இணைந்து எழுதி இயக்க, கதையின் நாயகன் பெட்டோவாக சீசர் ட்ரோனோஸ்கோவும் அவனது மனைவி கர்மேனாக வெர்ஜினியா மென்டெஸீம் அவர்களது மகள் சில்வியாவாக வெர்ஜினியா ருய்ஸூம் நடித்திருந்தனர். மூலப் பிரதி திரு.ஃபெர்னான்டஸ் செய்ய, ஒளிப்பதிவை திரு.கர்லோன் செய்தார்.
இப்படத்தை தம் பேஸ்புக் மூலம் அறிமுகப்படுத்திய தீரு.யவனிக்கா ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment